ஏவுதளத்தில் இருந்து செங்குத்தாக பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த இந்திய பாதுகாப்புத்துறையினர்..! 

0 4055

ஏவுதளத்தில் இருந்து செங்குத்தாக பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலாசூரை ஒட்டிய கடற்பரப்பில் நடைபெற்ற சோதனையில், ஏவுகணை கச்சிதமாக இலக்கை தாக்கியதாக ராணுவ ஆய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இந்திய கடற்படைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விண் இலக்கை தாக்கி அழிக்கும் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் இந்திய கடற்படையின் வலிமை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments